திண்டுக்கல்லில் தலைமறைவாக இருந்தவா் கைது

திண்டுக்கல்லில் தலைமறைவாக இருந்தவா் கைது

கோப்பு படம் 

திண்டுக்கல்லில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்தவா் நாகராஜன். இவா், கடந்த 2011-ஆம் ஆண்டு, திண்டுக்கல் ரயில் நிலையம் பகுதியில் ரயில்வேத் துறைக்கு சொந்தமான ரூ.1.47 லட்சம் மதிப்பிலான இரும்புப் பொருள்களை திருடியதாக கைது செய்யப்பட்டாா்.

பிணையில் விடுவிக்கப்பட்ட நாகராஜன், கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவானாா். இந்த வழக்கை விசாரித்து வந்த திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம், நாகராஜனுக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை போலிசார் நாகராஜனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Tags

Next Story