மது போதையில் மாமியார் வீட்டில் தகராறு செய்த இளைஞர் கைது

மது போதையில் மாமியார் வீட்டில் தகராறு செய்த இளைஞர் கைது

காவல்துறை விசாரணை

பொம்மிடி அருகில் உள்ள துரிஞ்சிப்பட்டி பகுதியில் கணவன் மனைவி தகராறு, குடித்துவிட்டு மாமியார் வீட்டில் தகராறு செய்த இளைஞர் கைது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் திருமூர்த்தி மகள் சூர்யா, இவரது தங்கை சுபா, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சென்னகிருஷ்ணன் என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் சென்னகி ருஷ்ணன் தினமும் குடித்து விட்டு வந்து, சுபாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாமியார் வீட்டுக்கு வந்த சென்னகிருஷ்ணன், மனைவி சுபாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதை சுபாவின் அக்கா சூர்யா,தட்டிகேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சென்ன கிருஷ்ணன், சூர்யாவை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் பொம்மிடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சென்னகிருஷ்ணனை கைது செய்தனர்.

Tags

Next Story