நெல்லை ரயில் நிலையத்துக்கு 1950 டன் யூரியா வருகை

நெல்லை ரயில் நிலையத்துக்கு  1950 டன் யூரியா வருகை

யூரியா மூட்டைகளை ஏற்றும் பணி 

நெல்லைக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அவ்வபோது ரயில்களில் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் விவசாயத்துக்கு தேவையான உரங்களும், கட்டுமானத்திற்கு தேவையாக சிமெண்டு மூட்டைகளும் நெல்லைக்கு கொண்டு வரப்படுகின்றன.அதன்படி இன்று காலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு சுமார் 1950 டன் யூரியா உரம் சரக்கு ரயில் மூலம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.29 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட உரத்தை லாரிகள் மூலம் ஏற்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Tags

Next Story