மங்கையர்கரசி மகளிர் கல்லூரியில் கலைவிழா

மங்கையர்கரசி மகளிர் கல்லூரியில்  கலைவிழா

கலைவிழா

மங்கையர்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "நட்சத்திரா-24" அனைத்துக் கல்லூரிகளுக்குமான கலைவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "நட்சத்திரா-24" அனைத்துக் கல்லூரிகளுக்குமான கலைவிழா நடைபெற்றது. நிகழ்விற்கு முதல்வர் முனைவர். உமா பாஸ்கர் வரவேற்புரை வழங்கினார்.

செயலாளர் முனைவர்.பி.அசோக்குமார் தலைமை உரை வழங்கினார் .இயக்குனர் அ.சக்தி பிரனேஷ் வாழ்த்துரை வழங்கினார் .சிறப்பு விருந்தினராக விஜய் டிவி நட்சத்திரம் நடிகர் ரியோ ராஜ் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். எந்தத் துறையாக இருந்தாலும் மாணவர்கள் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு செயல்பட வேண்டும் அப்போதுதான் வெற்றி கனியை பறிக்க முடியும் என்று அறிவுரையும் வழங்கி சென்றார்.

நிகழ்விற்கு 25க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து700 கும் மேற்பட்ட மாணவர்கள் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். பரதநாட்டியம் ,நாட்டுப்புற நடனம், As you like it, Fashion parade, Imitation dance, கம்பிக் கோலம் புகைப்படம் எடுத்தல், ரீல்ஸ் மேக்கிங், நெருப்பில்லாத உணவு முதலான பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன. இப்போ போட்டிகளில் வெற்றி பெற்று முதலாவது பரிசு ரூ.10,000 மற்றும் கேடயத்தை அருள்மிகு மீனாட்சி கல்லூரி மாணவர்கள் தட்டிச் சென்றனர்.

இரண்டாவது பரிசுரூ. 5000 மற்றும் கேடயத்தை மடோனா கல்லூரியும் பெற்றுச் சென்றனர். இறுதியாக தமிழ் துறை தலைவர் முனைவர் வே.ஜெயபூர்ணிமா நன்றியுரை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story