செஞ்சி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் கலைத் திருவிழா

செஞ்சி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் கலைத் திருவிழா

கலைத் திருவிழா 

செஞ்சி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டியில் இயங்கிவரும் ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் கலைத் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் தாளாளரும், வக்கீலுமான ரங்க பூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி, இயக்குனர் சாந்தி, பூபதி இன்டர்நேஷனல் பள்ளி இயக்குனர் சரண்யா ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு காலை முதல் மாலை வரை கல்லூரி மாணவ- மாணவிகளின் தனிநபர், குழு நடனப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், சின்னத்திரை நடிகை அகிலா பிரதாப் கலந்து கொண்டு நடன போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் கல்லூரி முதல்வர்கள் மணிகண்டன், முருக தாஸ், கோவிந்தராஜ், சசிகுமார், மேனகா காந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story