பள்ளிபாளையத்தில் கலைஞர் கருணாநிதி 101வது பிறந்த நாள் விழா

பள்ளிபாளையத்தில் கலைஞர் கருணாநிதி 101வது பிறந்த நாள் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

முன்னாள் தமிழக முதல்வரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி 101 வது பிறந்த நாளை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் ஆவரங்காடு நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு,

நகரச் செயலாளர் குமார் தலைமை தாங்கினார். நகர அவை தலைவர் குலோப் ஜான் திமுக கொடியினை ஏற்றி வைத்தார் . நிகழ்வில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.. இதன் பின்னர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், பிரட், பன் ஆகியவை வழங்கப்பட்டது.

நகர்மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன்,திமுக பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள்,வார்டு கிளைச் செயலாளர்கள், திமுக முன்னணி பொறுப்பாளர்கள், இளைஞர் அணியினர் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்..

Tags

Next Story