கலைப்பண்பாட்டு இயக்ககத்தின் கலைத் திருவிழா

கலைப்பண்பாட்டு இயக்ககத்தின் கலைத் திருவிழா

கலை திருவிழாவில் பரிசு வென்றவர்கள்

கலைப்பண்பாட்டு இயக்ககத்தின் கலைத் திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கலில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் கலையரங்கத்தில், கலைத்திருவிழாவை தொடங்கி வைத்து, சிறந்த கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 100 கலைஞர்கள் பங்குபெற்ற கலைத்திருவிழாவை நேற்றிரவு தொடங்கி வைத்து, சிறந்த கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேர் முன்னிலை வகித்தார்.

விழாவில், கரகாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பெரிய மேளம், நையாண்டி மேளம், தப்பாட்டம், கிராமிய தெம்மாங்கு பாடல்கள், சத்தியவான் சாவித்திரி இசை நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags

Next Story