ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா

ஆம்பூரில் நடந்த கலைத் திருவிழாவில் 15க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினார்

திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கிடையேயான கலைத்திருவிழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டனர்.பின்னர் இந்த கலைத்திருவிழாவில் சுமார் 15 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களின் நடனம், வில்லுப்பாட்டு, இசை வாய்ப்பாடு, பேச்சுப்போட்டி, ஓவியம், களிமண்ணில் சிலை செய்யுதல், மேளம் அடித்தல் போன்ற பல்வேறு கலைகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.கலைத்திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களின் திறமைகளை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டினார்.




Tags

Next Story