சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது
திருவாதிரையை முன்னிட்டு விருதுநகர் சிவன் கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமொ தரிசனம் செய்தனர்
விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் அபிஷேகமும், அதனை அடுத்து 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடை பெற்றது. தாண்டவ தீபாராதனை காட்டப்பட்டு மதியம் 1:00 மணிக்கு உற்ஸவ மூர்த்திக்கு தீபாராதனை காட்டப்பட்டு சுவாமி வீதியுலா புறப்பாடு சென்றார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள நடராஜர் கோயிலில் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு அபிஷேகமும், அதிகாலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடை பெற்றது..

Tags

Next Story