அருப்புக்கோட்டை : வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்
, அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.92 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பின்னர், அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.57 கோடி மதிப்பில் புதிய சந்தை வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும், அதனை தொடர்ந்து, சுக்கிலநத்தத்தில் ரூ.1.80 கோடி மதிப்பில் நுண் உர மையம் அமைக்கப்பட்டு அருப்புக்கோட்டை நகராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகளையும், பின்னர், பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ்; ரூ.2.97 கோடி மதிப்பில் கழிவு நீரேற்றும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.

Tags

Next Story