தர்மபுரியில் 19 ஆவது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை

தர்மபுரியில் 19 ஆவது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் 19வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் ஆ.மணி முன்னிலையில் உள்ளார்.


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் 19வது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் ஆ.மணி முன்னிலையில் உள்ளார்.
தமிழகத்தில் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது அதனை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று ஜூன் 4 நடைபெற்று வருகிறது. மாலை 4: 15 மணிப்படி,19 சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஆ.மணி 3, 81, 041 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும்,பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 3, 61, 381 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 2, 54, 548 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

Tags

Next Story