பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

 வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு அணியாபுரம் ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு அணியாபுரம் ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல்- மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரம் NPS நகரில் உள்ள அஷ்ட பைரவர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷ்ண பைரவருக்கு இன்று வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட காலபைரவருக்கு18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story