மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க அஸ்வமேதை யாகம்

மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க அஸ்வமேதை யாகம்

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க அஸ்வமேதை யாகம் நடைபெற்றது.


கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க அஸ்வமேதை யாகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புதுக்காடு குடியிருப்பு பகுதியில் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலில் தேனி மாவட்டம்,கூடலூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளை சார்பாக( ஸ்ரீசுந்தர வடிவேல் சுவாமிகள்) 2024 வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மோடி வெற்றி பெற்று,மீண்டும் பிரதமராக பதவி வகிக்க அஸ்வமேதை யாகம் நடைபெற்றது.

இந்த யாகத்தில் ஏலக்காய்,வாசனை திரவியங்கள்,மிளகு, பழ வகைகள்,பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு நடைபெற்றது, இந்த யாகத்தில் கொடைக்கானல் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து வ‌ந்த‌ப்பொதுமக்களும் கலந்து கொண்டனர், யாகம் பூஜை நடைபெறுவதற்கு முன்பு குதிரைக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது, இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுந்தர வடிவேல் 3 வது முறையாக பிரதமராக மோடி பதவி வகிக்க யாக பூஜை நடத்தப்பட்டதாகவும்,கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் நடைபெற்ற முதல் அஸ்வமேதை யாக பூஜை இது தான் என்றும்,இந்தியா கூட்டணி சிதறி ஒன்றும் இல்லாமல் போய் விடும் என்றும்,தமிழக அரசியல் மாற்றங்கள் கதியெற்ற சூலலுக்கு போகும் என‌வும் ஆன்மிகத்தை யார் ஒருவர் இழிவுபடுத்துகிறார்களோ இந்த மண்ணில் வாழும் மக்களுக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் எனவும் பேட்டியளித்தார்

Tags

Next Story