ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் படுகொலை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டான நடேசன் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்து , தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் மனைவியுடன் விவசாயம் செய்து வந்துள்ளார். இதனிடையே இன்று தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது , மர்ம நபர்கள் நடேசன் தலை மற்றும் உடலில் கல்லை போட்டு தாக்கியும் அறிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த வெள்ளிதிருப்பூர் போலீசார் நடேசனின் சகலத்தை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரித்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் நில தகராறு காரணமாக நடேசன் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story