ஹோட்டலில் உணவு கேட்டவர் மீது தாக்குதல்-வழக்கு பதிவு

ஹோட்டலில் உணவு கேட்டவர் மீது தாக்குதல்-வழக்கு பதிவு

நித்திரவிளை அருகே ஹோட்டலில் உணவு கேட்டவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நித்திரவிளை அருகே ஹோட்டலில் உணவு கேட்டவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொல்லங்கோடு அருகே காட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஜின் குமார். ரியல் எஸ்டேட் தொழில் 3 செய்து வருகிறார். கடந்த 19 ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட சென்று உள்ளார். சுமார் முக்கால் மணி நேரம் காத்திருந்தும் உணவு வர வில்லை.அதேவேளையில் ஊழியர்கள் ஜின்குமாருக்கு உணவு கொடுக்காமல் எழும்பி வெளியே போக சொல்லி உள்ளனர்.ஆனால் அவர போகாமல் உட்கார்ந்து இருந்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 ஊழியர்களும் சேர்ந்து அவரை பல பகுதிகளில் . தாக்கியதாக கூப்படுகிறது.பின்னர் அவரை பிடித்து மிதித்து ஓட்டலின் வெளியே தள்ளியதாகவும் தெரிகிறது. இந்த தாக்குத லில் படுகாயம் அடைந்த ஜின்குமார் குழித்துறை அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் கண் டால் தெரியும் 3 ஓட்டல் ஊழியர்கள் மீது இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story