கொடுத்த கடனை திரும்ப கேட்ட நபர் மீது தாக்குதல்

கொடுத்த கடனை திரும்ப கேட்ட நபர் மீது தாக்குதல்
 விருதுநகரில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட நபரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
விருதுநகரில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட நபரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பேராளி ரோடு பகுதியைச் சார்ந்தவர் மகாலட்சுமி இவர் விருதுநகர் முருகன் கோவில் அருகே கரும்புச்சாறு வியாபாரம் செய்து வருவதாக புறப்படுகிறது இவருக்கு கடை அருகே அபிஷ் காபி விற்பனை செய்து வரும் ஸ்டெல்லா என்பவருக்கும் மகாலட்சுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும் ஸ்டெல்லா தனது மூத்த மகனின் திருமணத்திற்காக மகாலட்சுமி இடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கடனாக பெற்றதாகவும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கிய கடனுக்கு இரண்டு மாதம் மட்டுமே வட்டி செலுத்தியதாகவும் அதற்கு மேல் வட்டியும் அசலும் தராமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது இதை எடுத்து மகாலட்சுமி தொடர்ந்து ஸ்டெல்லாவிடம் பணம் குறித்து கேட்டதற்கு ஸ்டெல்லா எந்த பதில் சொல்லாமல் இருந்ததால் எடுத்து மகாலட்சுமி அவரது கணவர் கருப்பசாமியுடன் ஸ்டெல்லாவின் இருப்பிடத்திற்கு சென்று கொடுத்த பணம் கொடுத்து குறித்து கேட்டுள்ளார்.

அப்பொழுது அங்கே இருந்த ஸ்டெல்லா, அவரின் உறவினர்களான அந்தோணியின் மகள் ரித்திகா மற்றும் அவர் நண்பர்கள் ஒருவர் என மொத்தம் நான்கு நபர்கள் சேர்ந்து கருப்பு சாமியை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது இதில் காயமடைந்த கருப்பசாமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகாலட்சுமி அளித்த புகார் அடிப்படையில் நான்கு நபர்கள் மீது கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story