தூய்மை பணியாளர் மீது தாக்குதல்: மேற்பார்வையாளர்  கைது 

தூய்மை பணியாளர் மீது தாக்குதல்: மேற்பார்வையாளர்  கைது 
பைல் படம்
வேர்க்கிளம்பி பேரூராட்சியில் அத்துமீறி தூய்மைப்பணியாளரை தாக்கிய மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் கொற்றிக்கோடு சரல்விளையைச்சேர்ந்தவர் விக்டர் ஜாண் (63) . கடந்த 8 ஆண்டுகளாக வேர்க்கிளம்பி பேரூராட்சியில் இவர் தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் இவர் காரியமங்கலம் என்ற இடத்தில் சக பணியாட்களுடன் வேலை செய்து கொண்டிருந்தபோது, மேற்பார்வையாளர் ராபி(45) என்பவர் அங்கு வந்துள்ளார்.

அவரிடம் விக்டர் ஜான் தனக்குரிய பணத்தைக்கேட்டுள்ளார். அதற்கு “உனக்கு ஏது பணம்? “ என்று கேட்டு தகாத வார்த்தைகளை ராபி பேசியதாகத்தெரிகிறது. தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்த விக்டர்ஜானை மண்வெட்டியால் தாக்கியதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. மேலும் மண் வெட்டியைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்துச்சென்றுள்ளார். காயமடைந்த விக்டர்ஜான் தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்ச்சைக்காகச்சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபியை கைது செய்தனர்.

Tags

Next Story