கடனுக்கு மது தரமறுத்த ஊழியர் மீது தாக்குதல்

கடனுக்கு மது தரமறுத்த ஊழியர் மீது தாக்குதல்

சிசிடிவி காட்சி 

திருவாரூர் அருகே கடனுக்கு மது பாட்டில் தர மறுத்த டாஸ்மாக் ஊழியரை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அருகே மாவூர் கிராமத்தில் டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. அலெக்சாண்டர் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார் . சுதாகர் என்பவர் கடனுக்கு மது பாட்டில் கேட்டுள்ளார். கடை விற்பனையாளர் கடனுக்கு மது கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர் கடைக்குள் புகுந்து விற்பனையாளரை சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story