மகனைத் தாக்கி பெண்ணுக்கு மிரட்டல்; 2 பேர் கைது 

மகனைத் தாக்கி பெண்ணுக்கு மிரட்டல்; 2 பேர் கைது 
பைல் படம் 
தாழக்குடியில் மகனைத் தாக்கி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி மேலரத வீதியை சேர்ந்தவர் குமார் மனைவி அம்பிகா (49). இவர்களது மகன் ஹரிஷ். இவருக்கும் தாழக்குடி வடக்கு பள்ளத்தெரு பகுதி சேர்ந்த உமாநாத் மகன் வாசு என்பவருக்கு முன்வருவதும் இருந்து வந்தது. வாசுவும் அவரது நண்பரான தாழக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்த கிஷோர் (21) என்பவரும் சேர்ந்து ஹரிசை கடந்த வாரம் மீனமங்கலம் காலணி அருகில் வைத்து தாக்கியுள்ளனர்.

இது சம்பந்தமான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது. இது பற்றி ஹரிஷ் கொடுத்த புகார் பெயரில் வாசு மற்றும் கிஷோர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வாசு தனது நண்பர் கிஷோர் மற்றும் இன்னொரு நண்பருடன் ஹரிஷ் என் வீட்டிற்கு சென்றுள்ளார். ஹரிஷின் தாய் அம்பிகாவை தகாத வார்த்தைகள் பேசி உள்ளனர். இதனை ஹரிஷ் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹரி ஷை கீழே தள்ளித் தாக்கியுள்ளனர். இதனை அம்பிகாவை கையில் இருந்த ஆயுதத்தை காட்டி மிரட்டி சென்றுள்ளனர். இது தொடர்பாக அம்பிகா கொடுத்த புகாரின் பேரில் ஆழ்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து வாசு மற்றும் கிஷோரை கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story