சோழிங்கநல்லூரில் திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை

சோழிங்கநல்லூரில் திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை
திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை
சோழிங்கநல்லூரில் திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனை நடத்தினார்.

சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மண்டலம் 15-ல் உள்ளடக்கிய பகுதியான செம்மஞ்சேரி, மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டுமெனவும், ம‌ற்று‌ம் விடுபட்ட பகுதிகளுக்கு மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற உள்ளதால்,

அதன் சம்பந்தமாக குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அரசு அதிகாரிகளுடன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

உடன், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளரும்,15 வது மண்டல குழு தலைவர் V.E மதியழகன்,மாமன்ற உறுப்பினர் A.முருகேசன், உள்ளிட்ட அனைவரும் உடனிருந்தனர்.

Tags

Next Story