அடிக்கடி மின்வெட்டு -அலுவலகம் முற்றுகை

அடிக்கடி மின்வெட்டு -அலுவலகம் முற்றுகை

முற்றுகை போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம், அரிசந்திராபுரம் பகுதியில் தொடர் மின்வெட்டால் மின்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதிக்கு அரக்கோணம் அடுத்த மோசூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. கோடைக்காலம் துவங்கியது முதல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதுடன் குறைந்த அளவு மின்னழுத்தத்தால் பகுதிவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மோசூரில் உள்ள மின்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் உங்கள் பகுதிக்கு தேவையான மின் உபகரணங்கள் கோரி அரசுக்கு முன்மொழிவுக்கு அனுப்பி உள்ளோம். நிதி ஒதுக்கப்பட்டதும் சீரமைக்கப்படும். பின் சீரான மின் வினியோகம் கிடைக்கும் என உத்தரவாதம் அளித்து சமரசம் செய்து அனுப்பினர்.

Tags

Next Story