லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கைது

லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கைது

ரூபாய் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர்.


ரூபாய் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர்.
ரூபாய் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநர் கைது. விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை. விருதுநகர் தொழிலாளர் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் தயாநிதி.இவர் விருதுநகர் அக்ரஹாரம் தெருவில் மருந்து கடை நடத்தி வரும் ஆனந்தராஜ் என்பவரிடம் மருந்துக்கடை மற்றும் ஏஜென்சி விதிமீறல் வழக்குகளை முடித்து தருவதற்காக ரூபாய் 75 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து ஆனந்தராஜ் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தனர். போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆனந்தராஜ் இடம் வழங்கினர். அதனை தயாநிதியின் டிரைவர் மணிவண்ணன் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் காரில் மறைந்திருந்த தயாநிதியையும் பிடித்து விருதுநகர் தொழிலாளர் துறை அலுவலத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags

Read MoreRead Less
Next Story