தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில், கலை நிகழ்ச்சி: நடிகர் சிவகார்த்திகேயன்

தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில்,  கலை நிகழ்ச்சி:  நடிகர் சிவகார்த்திகேயன்

கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் அனந்தரா - 2024’ கலை நிகழ்ச்சி 2 நாள் விழாவாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ சீனிவாசன், இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன்,

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் செல்வி. நீவாணி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும செயலாளர் நீலராஜ், பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ரஞ்சன், பதிவாளர் டாக்டர் தனசேகரன் தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டார்கள். நிறைவு நாளான நேற்று இரவு நடிகர் சதிஷ், நடிகை மைனா நந்தினி மற்றும் டிவி தொகுப்பாளனி கல்யாணி ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

நடன கலைஞர் மற்றும் நடன இயக்குனருமான பாபா பாஸ்கர் கலந்துகொண்டார். பின்னர் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நடன கலைஞர் பாபா பாஸ்கர் மாணவர்களின் நடனத்தை வெகுவாக பாராட்டி மாணவர்களிடையே கலந்துரையாடினார். நடிகர் சிவகார்த்திகேயன், குண்டூர் காரம் புகழ் நடிகை ஸ்ரீலீலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினர். பல்கலைக்கழக மாணவர்களின் நடனங்கள் அவர்களின் திறமைகளை முன்னிலைப்படுத்தியது மட்டுமல்லாமல், கலாச்சார பரிமாற்றம் மற்றும் கொண்டாட்டத்தையும் ஊக்குவித்தது.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், தனது மாணவர்களிடையே படைப்பாற்றல் மற்றும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது. 2 நாள் கொண்டாட்டமாக நடைபெற்ற இவ்விழா மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக அமைந்தது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக கல்லூரி புல முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story