ஒரே நேரத்தில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பைரவர் வழிபாடு

அவல்பூந்துறை அருகே பைரவர் கோவிலில் அமைச்சர் முத்துசாமியும்,முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் பரஸ்பரம் சகஜமாக பேசிக்கொண்டு வழிபாடு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது. தேய்பிறை அஷ்டமி தினம் கால பைரவருக்கு உகந்த தினம் என்பதால் இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் தங்கள் கைகளால் பைரவருக்கு அபிஷேகம் செய்தனர் இந்த அபிஷேகத்தில் தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமியும் , அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் ஓரே நேரத்தில் இருவரும் நெருங்கி நின்று சாதாரணமாக பேசி மகிழ்ந்து கால பைரவரை வழிபட்டு அபிஷேகம் செய்தனர்.

Tags

Next Story