திருப்பத்தூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூரில்  மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரித்த மமக நிர்வாகிகள்

திருப்பத்தூர் நகர் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாக்கு சேகரித்தனர்.

திமுக வேட்பாளர் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் சி என் அண்ணாதுரை ஆதரித்து திருப்பத்தூர் நகரில் உள்ள 8,9,10 ஆகிய வார்டுகளில் மனிதநேய மக்கள் கட்சியின்ஆதரவு பெற்ற INDIA கூட்டணியின் திமுக வெற்றி வேட்பாளர் C.N.அண்ணாதுரை அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் "மமக" சார்பில் இன்று வாக்கு சேகரிக்கப்பட்டது.

நகர கழக செயலாளர் அண்ணன் எஸ்.ராஜேந்திரன் சட்டமன்ற உறுப்பினர் A.நல்லதம்பி,தேர்தல் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் வசந்த்குமார் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், துணை தலைவர் A.R.ஷபியுல்லாஹ், முன்னாள் நகரமன்ற தலைவர் அரசு சந்திரசேகர் C.K.சனாவுல்லா மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.

மமக நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டு வார்டு வாரியாக உதயசூரியனுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்கள் மற்றும் வீடுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story