ஆத்தூர் : 227 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் ஆத்தூர் சப் டிவிஷனில் 227 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் ஒப்படைக்க சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் உத்தரவிட்ட நிலையில் ஆத்தூர் சப் டிவிஷன் உட்பட்ட ஆத்தூர் டவுன் ஊரக காவல் நிலையம், தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, மல்லிகரை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இதுவரை 227 துப்பாக்கிகள் உரிமம் பெற்றவர் ஒப்படைத்துள்ளனர்

Tags

Next Story