ஆத்தூர் : இரயில்வே தண்டவாளத்தில் பி.இ.பட்டதாரி உடல் துண்டான நிலையில் மீட்பு

ஆத்தூர் : இரயில்வே தண்டவாளத்தில் பி.இ.பட்டதாரி உடல் துண்டான நிலையில் மீட்பு

பட்டதாரி கார்த்திக் உடல் மீட்பு 

காந்திநகர் ரயில்வே தண்டாவாளப்பகுதியில் உடல் துண்டான நிலையில் பிஇ. பட்டதாரி கார்த்திக் உடல் மீட்பு இரயில்வே போலீசார் விசாரணை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக் (26) பி.இ., பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் உள்ள காற்றாலையில் வேலை செய்து வந்தார். தற்போது சில மாதங்களாக சென்னைக்கு பணி மாறுதல் செய்தனர். மேலும் இவரது திறமையான பணியால் இவரை அந்த நிறுவனம் மும்பைக்கு செல்லுமாறு தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு சென்னையில் இருந்து சேலத்திற்கு பேருந்தில் வந்தார். அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் சென்னையிலிருந்து வந்த பேருந்தில் பார்த்துள்ளனர். அப்போது அந்த பேருந்தில் அவரது பேக் மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பேருந்து ஓட்டுனரிடம் விசாரித்துள்ளனர் அப்போது அவர் ஆத்தூரில் இறங்கி சென்றதாக தெரிவித்தனர் இறங்கி சென்றதாக தெரிவித்தனர். இந்நிலையில் ஆத்தூர் இரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பட்டதாரி கார்த்திக்கின் உடல் இரண்டு துண்டான நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இரயில்வே போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாரி கார்த்திக் அவரே இரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என இரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து சேலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றவர் உடல் துண்டான நிலையில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story