ஆத்தூர்: சேகோ ஆலையில் பாயிலரில் தீ விபத்து

ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியில் உள்ள சேகோ ஆலையில் திடீரென பாயிலரில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சேகோ ஆலையில் திடீரென நேற்று இரவு பாய்லரில் இருந்து புகை மூட்டம் காணப்பட்ட நிலையில் அப்பகுதிக்குச் சென்று பார்க்கும் போது திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது இதனை அடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

Tags

Next Story