ஆத்தூர் : காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் வருகை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் வருகை புரிந்த பிரதமர் மோடி மற்றும் மீனவர் உரிமையை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார் பாஜக கட்சி நிகழ்வு மற்றும் ஏவுதள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமையையும் பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருப்பு கொடி ஏந்தியும் கருப்பு பலூன் பறக்கவிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் பிரதமர் மோடி தமிழகத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story