ஆத்தூர் : குடிசை வீட்டில் தீ விபத்து

ஆத்தூர் அருகே முல்லைவாடியில் உள்ள சமையல் செய்யும் போது தீ பொறி பட்டு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முல்லைவாடி பகுதியில் வசித்து வரும் பெருமாள் மகன்கள் பிச்சன்,செல்வம், தர்மன் 3 நபர்களும் சகோதரர்கள் ஆவார்கள் இவர்கள் மூவருக்கும் ஒரே இடமாக சமையல் செய்ய ஒரு கீற்று கெட்ட கையில் சமையல் செய்து வந்துள்ளனர். சமையல் செய்யும் போது தீ பொறி குடிசையில் பட்டு ஏற்பட்ட தீ விபத்தினால் சமையல் கூடம் மற்றும் பன்றி வளர்ப்புக்காக போடப்பட்டு இருந்த பழைய கொட்டகை இரண்டும் தீயினால் எரிந்து முற்றிலும் சேதமானது. இதில் சமையலுக்கு வைத்திருந்த பொருட்களும் சேதம் அடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags

Next Story