ஆத்தூர் : வளையம்மாதேவியில் புளியமரத்தில் தீ விபத்து

ஆத்தூர் அருகே வளையமாதேவியில் புளியமரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வளையமா தேவி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் அருகில் புளியமரம் ஒன்று இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று மாலை அந்த மரத்தில் திடீரென மர்மமான முறையில் ப தீப்பற்றி புகை மூட்டம் காணப்பட்டது. மேலும் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்நத நிலையில் தீ மளமளவென எறிய தொடங்கியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் புளிய மரத்திற்கு தீ யாராவது மர்ம நபர்கள் வைத்தார்களா ? அல்லது கோடை வெயில் தாக்கத்தால் தீ பற்றியதா என்பது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story