ஆத்தூர் : உடையம்பட்டியில் முற்புதரில் தீ விபத்து !

ஆத்தூர் அருகே உடையம்பட்டி பகுதியில் காய்ந்த முற்புதரில் திடீர் தீ விபத்து. 100 நாள் வேலை பணியார்கள் தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் தண்ணீர் பீட்சி அடித்து அணைத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு உடையம்பட்டி பகுதியில் சுடுகாடு அருகே கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை 100 நாள் வேலைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தீ வைத்து எரித்த போது எதிர்பாராத விதமாக அருகில் காய்ந்த முற்புதர்கள் திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. துரித முயற்சியில் பணியாளர்கள் தீயை அணைக்க போராடிய போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் அடித்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story