ஆத்தூர் : இலவச கண் சிகிச்சை முகாம்

ஆத்தூர் : இலவச கண் சிகிச்சை முகாம்

கண் பரிசோதனை 

ஆத்தூர் ஆதவன் அரிமா சங்கம் கல்பகனூர் ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சேவை சங்கமான ஆத்தூர் ஆதவன் அரிமா சங்கம் கல்பகனூர் ஊராட்சி மன்றம் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ராமநாயக்கன்பாளையம் கல்பகனூர் கொத்தம்பாடி உள்ளிட்ட கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்புரை சக்கர நோயாளி ஏற்படும் பாதிப்பு கண்ணீர் அழுத்த நோய் குழந்தைகளின் கண் நோய் கண்ணின் கருவிழியில் புண் உள்ளிட்ட பல்வேறு கண் சம்பந்தப்பட்ட பரிசோதனை செய்து வருகின்றனர். முகாம் ஏற்பாட்டாளர் அரிமா சந்திரன் மற்றும் ஆதவன் அரிமா சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அரவிந்த் கண் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story