ஆத்தூர்: சூறைக்காற்றுடன் பெய்த கனமழை
ஆத்தூரில் கனமழை
ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சூறைக்காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. ஆத்தூர் நகரப் பகுதிகளான முல்லை வாடி, உடையார்பாளையம், விநாயகபுரம் மற்றும் நரசிங்கபுரம், மஞ்சினி கொத்தம்பாடி செல்லியம்பாளையம் கல்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கனமழை காரணமாக ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
Next Story