ஆத்தூர் : கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி செலவு மேற்பார்வையாளர் ஆய்வு

ஆத்தூர் : கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி செலவு மேற்பார்வையாளர் ஆய்வு

ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி செலவு மேற்பார்வையாளர் செலவினங்கள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.


ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி செலவு மேற்பார்வையாளர் செலவினங்கள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் ,கெங்கவல்லி ,ஏற்காடு, ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.இந்நிலையில் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மக்களவை தேர்தல் செலவின மேற்பார்வையாளர் மனோஜ் சர்மா ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது இதுவரை செய்யப்பட்ட செலவினங்கள் குறித்தும், பொதுமக்கள் ரூ 50,000 ஆயிரத்து மேல் கொண்டு சென்றால் அதற்கான உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார். ஆய்வின் போது ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியதர்ஷினி, வட்டாச்சியர் பாலாஜி, உள்ளிட்ட வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story