ஆத்தூர் : நியாயவிலை கடையை MP திறந்து வைத்தார்

ஆத்தூர் கண்ணாடி மில் தெருவில் ₹10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கெளதமசிகாமணி திறந்து வைத்தார்.

சேலம. மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கண்ணாடி மில் தெரு பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நியாய விலை கடை அமைத்து தர கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளித்திருந்த நிலையில் ₹10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நியாய விலை கட்டிட பணி முடிவடைந்த நிலையில் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதமி சிகாமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் நகராட்சி நகர மன்ற தலைவர் நிர்மலா பப்பித்த,நகர செயலாளர் ,நகராட்சி ஆணையாளர்,நகர மன்ற உறுப்பினர்கள் அப்பகுதி பொது மக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story