ஆத்தூர் : நரசிங்கபுரம் நகரமன்ற ௯ட்டம்

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 29 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சுகாதாரப் பணிகளை முறையாக செய்யவில்லை இதனால் அப்பகுதிகளில் குப்பைகளை தரம் பிரிக்காமல் சாலையோரங்களிலேயே வீசி செல்வதாகவும் அதில் புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி துர்நாற்றம் வருவதாகவும்,4வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ஜோதிதமிழக முதல்வர் பிறந்த நாள் விழா மற்றும் முதல்வர் நிகழ்ச்சிக்காக நாளிதழ்களில் வரும் விளம்பரத்தில் தலைவர் துணைத் தலைவர் ஆணையாளர் பெயர்கள் மட்டுமே இடம்பெற்று இருப்பதாகவும் ஏன் நகர் மன்ற உறுப்பினர்களின் பெயரை சேர்க்கவில்லை என கேள்வி,திமுக நகர மன்ற உறுப்பினர்களே சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

Tags

Next Story