ஆத்தூர் : நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் பணியிட மாற்றம்

ஆத்தூர் : நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் பணியிட மாற்றம்


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் ஆணையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் ஆணையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்டவைகளுக்குபொதுமக்கள் மனு அளித்திருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பு செய்வதாகவும் லஞ்சம் கேட்பதாகவும் நகர மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதன் எதிரொலியாக நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன், நகர மன்ற தலைவர் அலெக்ஸாண்டர் மற்றும் நகராட்சி அலுவலர்கள்,அதிமுக திமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விசாரணை மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நகராட்சி ஆணையாளரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டார்.மேலும் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என நகரமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டசில மணி நேரங்களிலேயே நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜபேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேல்விஷாரம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story