ஆத்தூர் : தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் !

ஆத்தூர் : தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் !

பிளாஸ்டிக் பொருட்கள்

ஆத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் லாரி உரிமையாளருக்கு ₹50ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை தடுக்கும் பொருட்டு நகராட்சி சுகாதார அதிகாரிகள் சாராத ரவுண்டான பகுதியில் சுகாதார அலுவலர் பழனிவேல் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து ஆத்தூருக்கு பார்சல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தபோது அதில் ஒரு லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 1டன் பிளாஸ்டிக் பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருளை ஏற்றி வந்த லாரியின் உரிமையாளருக்கு 50ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story