ஆத்தூர்: பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஆத்தூர்: பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஆத்தூர் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது.
சேலம் மாவட்டம் ஆத்துார் புதிய பேருந்து நிலையத்தில் நகர மாவட்ட பகுதிகளுக்கான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர் இந்நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையப் பயணியர் நிற்கும் இடம், பாதை உள்ளிட்ட இடங்களில் பழங்கள், பூ கடைகள், உள்ளிட்ட கடைகளை வைத்துள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக புகார் எழுந்தது. இதனால் ஆத்தூர் நகராட்சி அலுவலர்கள் , புது பேருந்து நிலையப் பகுதிகளில், பாதைகளில் இருந்த, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

Tags

Next Story