ஆத்தூர் : சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

ஆத்தூர் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து ராசிபுரம் பிரிவு சாலையில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி வழியாக வாகனங்கள் சென்றுவரும் நிலையில் அப்பகுதியில் உள்ள சிறிய பாலம் உடைப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர், இரவு நேரங்களில் பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து படுகாயம் அடையும் நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் பேரிகார்டு மட்டும் அமைத்து சாலை சீரமைக்காமல் அலட்சியப்போக்கோடு இருப்பதால் அப்பகுதி மக்கள் உடனடியாக சாலையை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story