ஆத்தூர் : இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

ஆத்தூர் : இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

திமுகவினர் பிரச்சாரம் 

ஆத்தூர் நகராட்சி பகுதியில் திமுகவினர் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் நகரம் முல்லைவாடி பகுதிக்கு உட்பட்ட 5,6 வது வார்டுகளில் " இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தில் வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து இரண்டரை ஆண்டுகள் கழகம் செய்த சாதனைகளை விளக்கியும், தேவயான கோரிக்கைகளை கேட்டறிந்தும், வரவிருக்கும் தேர்தலை ஒட்டி வாக்குகள் சேகரிக்கவும் பட்டது. இந்த பிரச்சாரத்தில் ஆத்தூர் நகர கழக செயலாளர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையிலும், சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர்முல்லை.பன்னீர் செல்வம் முன்னிலையிலும், 5 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தங்கவேல்,6 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி சின்னராஜ்,,7 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ,குமார், 25 வது வார்டு நகர மன்ற உறுப்பினர்,சம்பத்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story