ஆத்தூர் : இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

ஆத்தூர் நகராட்சி பகுதிகளில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் நகர செயலாளர், நகரமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 17,18,19,27ஆகிய வார்டுகளில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.திமுக ஆட்சியில் இரண்டரை ஆண்டு சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

இதில் நகர செயலாளர் பாலசுப்ரமணியம், நகர அவைத்தலைவர் A.மாணிக்கம், நகர பொருளாளர் A.G.ராமச்சந்திரன், முன்னால் நகர துணைச்செயலாளர் அஸ்கர்அலி, மாவட்ட சிறுபான்மை பிரி துணை அமைப்பாளர் லியாகத்அலி, வார்டு செயலாளர்கள் யூனுஸ், பாபு, செந்தில்குமார், தங்கவேல் நகர மன்ற உறுப்பினர்கள் அருணா சக்தி, கங்கையம்மாள்ரவி, பிரபு, மற்றும் கிளைகழக நிர்வாகிகள் பொன்னுசாமி, பாலு, அசார் மற்றும் கிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story