ஆத்தூர்: ரூ.2.51 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

ஆத்தூர்: ரூ.2.51 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

மஞ்சள் ஏலம்

ஆத்தூர் அருகே புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.2.51 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 488 விவசாயிகள் 2,416மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 17 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 17, 189 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 22, 223 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 15, 169ரூபாய்க்கும் அதிகபட்சமாக 18, 159 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 23, 589 அதி பட்சமாக 30,045 ரூபாய் விலை போனது. 2416மஞ்சள் மூட்டைகள் மூலம் 2 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Next Story