நள்ளிரவில் ஏடிஎம் மைய தீ விபத்தால் பரபரப்பு

நள்ளிரவில் ஏடிஎம் மைய தீ விபத்தால் பரபரப்பு

தீ விபத்து ஏற்பட்ட ஏடிஎம் மையம் 

திருவாரூர் அருகே மின்கசிவால் ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் நள்ளிரவு அலாரம் சத்தம் கேட்டுள்ளது அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று பார்த்தபோது ஏடிஎம் மையத்திலிருந்து தீ பற்றி புகை வெளியே வந்துள்ளது. உடனடியாக திருவாரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு மின்கசிவு காரணமாக பேட்டரியில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது உடனடியாக தீயை அணைத்தனர்.

Tags

Next Story