ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த தொழிலாளியிடம் வழிப்பறி

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த தொழிலாளியிடம் வழிப்பறி

பைல் படம்

சேலத்தில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்த நிலையில், மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.

சேலம் சீலநாயக்கன்பட்டி மதுரை வீரன் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 34). லாரி அலுவலகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சைக்கிளில் ெசன்றார். பின்னர் அவர் மையத்திற்குள் சென்று ரூ.10 ஆயிரம் எடுத்து கொண்டு வெளியே வந்தார். அப்போது அங்கு ேமாட்டார் சைக்கிளில் வந்த 2 சிறுவர்கள் வண்டியை நிறுத்தினர். சிறுவர்கள் இருவரும் திடீரென பிரபுவிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பிரபு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், பிரபுவிடம் பணம் பறித்தது மணியனூர் மற்றும் ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த 18 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதில் மணியனூரை சேர்ந்த சிறுவனை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story