அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்

அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்
1
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி வேளாண்மை உழவா நலத்துறை அட்மா திட்டத்தில் விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் அட்மா குழுத் தலைவர் ஏ.கே.அகிலன் தலைமையில் நடைபெற்றது.கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குநா சி.தவமணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை துணை இயக்குநர் க.சித்ரா பங்கேற்று பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் அற்புதவேலன் வரவேற்றார். கால்நடை உதவி மருத்துவர் கஸ்தூரி, விதைச்சான்று அலுவலர் சுரேந்தர், தோட்டக்கலை உதவி அலுவலர் செல்வேந்திரன், வேளாண்மை விற்பனை வணிகம் உதவி வேளாண் அலுவலர் சுரேஷ் ஆகியோர் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துக் கூறினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கர், பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story