பக்தர் மீது தாக்குதல்: மண்டை உடைப்பு

பக்தர் மீது தாக்குதல்: மண்டை உடைப்பு

மருத்துவமனையில் சிகிச்சை

கோவில் ஊழியர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம்
பழனி தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவிலுக்கு, எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் பாதையாத்திரையாக இன்று பழனி கோவிலுக்கு வந்தனர். அப்போது சாமிதரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்த பொழுது கோவில் ஊழியர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் செக்யூரிட்டியை சேர்ந்த காவலாளிகள் சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரை தாக்கியதாக தெரிகிறது. தலையில் பலத்த காயம் அடைந்த சந்திரனை பக்தர்கள் மீட்டு மலைக்கோவில் மேல் பிராகாரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Tags

Next Story