விவசாயி மீது தாக்குதல் - கூலித்தொழிலாளி கைது

விவசாயி மீது தாக்குதல் - கூலித்தொழிலாளி கைது

கைது 

தலைவாசல் அருகே, வேப்பம்பூண்டி ஊராட்சி ஓடைக் காட்டை சேர்ந்தவர் விவசாயி தங்கதுரை. இவர், சொட்டு நீர் பாசனத்துக்கு குழாய் பதிக்கும் வேலையும் செய்து வருகிறார். கடந்த, 17ல், வேலைக்கு சென்று விட்டு தலைவாசல், மும்முடியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அங்கு வந்த வேதநாயகபுரத்தை சேர்ந்த, கூலித் தொழிலாளி விக்னேஷ், 23, தங்கதுரையுடன் தகராறு செய்து கான்கிரீட் கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தங்கதுரை, சேலம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிககப்பட்டுள்ளார். இதுகுறித்து, தங்கதுரை மனைவி ரஞ்சனி அளித்த புகார் படி, விக்னேஷ் மீது மூன்று பிரிவுகளில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.

Tags

Next Story