முன்பகையால் கூலி தொழிலாளி மீது தாக்குதல்

முன்பகையால் கூலி தொழிலாளி மீது தாக்குதல்

காவல்நிலையம் 

சூலக்கரையில் முன் பகை காரணமாக கூலி தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சூலக்கரை பகுதியைச் சார்ந்தவர் கருப்பசாமி இவர் விவசாய கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த பங்குனி பொங்கலில் தகராறு ஏற்பட்டதாகவும் அதை ஊர் பொதுமக்கள் சமாதானப்படுத்திய நிலையில் அதை மனதில் வைத்துக்கொண்ட குமார் சின்னத்தாய் ஆகிய இருவரும் கருப்பசாமியை தரகுறைவாக பேசி கீழே தள்ளிவிட்டு காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் காயம் அடைந்த கருப்பசாமி அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story